News February 28, 2025

நாட்டு மக்கள் தவிக்கும் போது.. கனிமொழி சாடல்

image

நாட்டில் 100 கோடி மக்கள் போதிய வருமானமின்றி தவிக்கும் செய்தியை மடைமாற்ற முயல்வதாக பாஜகவையும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்து கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல், கார்ப்பரேட் நலன்களுக்காக மத்திய அரசு பாடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசு தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க ஹிந்தி விவகாரத்தை கையில் எடுத்தாக வைஷ்ணவ் விமர்சித்து இருந்தார்.

Similar News

News February 28, 2025

எச்சில் துப்புறதும் பாலியல் தொல்லையும் ஒன்னா!

image

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 வயது சிறுமி, சிறுவன் மீது எச்சில் துப்பியதால்தான் பாலியல் தொல்லை நடந்தது என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், இரண்டு பக்கமும் தவறு உள்ளது என ஆட்சியரே பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

News February 28, 2025

வாழ்க்கையை கெடுத்துவிட்டார்: ராஜமெளலி மீது புகார்

image

தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலி மீது, அவரது முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ராஜமெளலி செய்யும் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள அவர், தனது சாவுக்கு அவரும், அவரது மனைவி ரமாவும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 55 வயதாகும் தனக்கு திருமணம் ஆகாததற்கும், ராஜமெளலி தான் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News February 28, 2025

சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கிய இந்தியா

image

கடந்த 20 ஆண்டு காலமாக சீனாவின் பிடியில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தையை இந்தியா தன்வசப் படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதனை சீனா & வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியையும் தொடங்கியிருக்கிறது. உலக வர்த்தகத்தில் முக்கியமான இந்த மைல்கல் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா ஒடுக்கியுள்ளது.

error: Content is protected !!