News September 13, 2024
ஓய்வு எப்போது?.. Thug Life செய்த சாவ்லா..!

தோனி முதலில் ஓய்வு பெறுவாரா.. நீங்களா? என பியூஷ் சாவ்லாவிடம் (35) கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே தோனி (43) என கூறிய அவர், சச்சினுடனும் விளையாடினேன், தற்போது அவரது மகனுடனும் விளையாடுகிறேன் என தெரிவித்தார். மேலும், தொகுப்பாளரை பார்த்து, உங்களுடனும் விளையாடுவேன், உங்கள் மகனுடனும் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் என Thug Life சம்பவம் செய்தார்.
Similar News
News January 2, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
யார் இந்த ஜே.சி.டி பிரபாகர்?

தவெகவில் இணைந்த <<18744071>>ஜேசிடி பிரபாகர் <<>>எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1980, 2011 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக பணியாற்றி இருந்தார். அதிமுக பிளவின்போது OPS அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதில் முக்கியமானவர் இவர். கட்சி ஒருங்கிணைப்பு முயற்சி பலனளிக்காததால் தவெகவில் இணைந்துள்ளார்.
News January 2, 2026
2025-ல் மட்டும் 167 புலிகள் உயிரிழப்பு

உலகிலேயே அதிக புலிகளைக் கொண்ட நாடான இந்தியாவில், 2025-ம் ஆண்டில் 31 குட்டிகள் உட்பட 167 புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தகவலின்படி, இது 2024-ல் பதிவான இறப்புகளை விட 41 அதிகம் ஆகும். எந்த மாநிலத்தில், எவ்வளவு புலிகள் உயிரிழந்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


