News April 6, 2025
பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.
Similar News
News October 29, 2025
தூங்கும் முன் குழந்தைகளுக்காக இத பண்ணுங்க

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் குழந்தையிடம் 5 நிமிடங்கள் மனம் விட்டு பேசுங்கள். நாள் முழுக்க என்னென்ன செய்தார்கள், எது அவர்களை கஷ்டப்படுத்தியது, பிடித்த விஷயங்கள் எது, கற்றுக்கொண்டது என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன், அவர்களும் நிம்மதியாக உணர்வார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
News October 29, 2025
₹500 நோட்டு கையில் இருக்குதா? உடனே இதை பாருங்க

₹2000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட பிறகு, ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெள்ளை இடம் இருக்கும். அதனை மேலே பிடித்து பார்த்தால் காந்தி முகம் வாட்டர்மார்க்காக தோன்றும். ₹500 நோட்டாக இருந்தால், 500 என்ற எண் அதில் தெரியும். போலி நோட்டு அச்சிடுபவர்களால் இதனை அச்சிட முடியாது. SHARE IT
News October 29, 2025
பால் நிலவாக மின்னும் பிரியங்கா மோகன்..!

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது பிரகாசமான முகத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர், இன்ஸ்டாவில், தனது அபுதாபி விடுமுறை சுற்றுலா படங்களை பகிர்ந்துள்ளார். போட்டோஸ் பாருங்க, பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


