News April 6, 2025

பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

image

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

Similar News

News November 20, 2025

பழைய காலத்து பெருமை பேசக்கூடாது: கி.வீரமணி

image

அகில இந்திய கட்சி என பழைய காலத்து பெருமை எல்லாம் இப்போது பேசக்கூடாது என்று கி.வீரமணி கூறியுள்ளார். இன்றைய யதார்த்தம் மாநிலக் கட்சிகளை சார்ந்துதான் உள்ளது என்ற அவர், ராகுல் காந்தி பிஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாலும், அம்மாநில காங்., நிர்வாகிகள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் சாடியுள்ளார். கி.வீரமணியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News November 20, 2025

கனமழை: நாளை இங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதலே மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.

News November 19, 2025

12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

image

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!

error: Content is protected !!