News April 6, 2025

பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

image

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

Similar News

News December 23, 2025

ஜெட் வேகத்தில் விலை.. ஒரே நாளில் ₹3,000 உயர்வு

image

தங்கத்துக்கு இணையாக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹234-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹2,34,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹13,000 உயர்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News December 23, 2025

பாட்டிலில் விற்கும் குடிநீருக்கு புதிய கட்டுப்பாடுகள்!

image

பாட்டிலில் குடிநீரை விற்கும் நிறுவனங்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகளை FSSAI அறிவித்துள்ளது. இதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடுகளை மாதம் ஒருமுறையும், பிற அளவீடுகளை 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பரிசோதிக்க அறிவுறுத்தியுள்ளது. உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு BIS சான்றிதழ் தேவையில்லை என்றும் FSSAI உரிமம் மட்டுமே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’

image

விஜய்யின் கடைசி படம் என்பதால், ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் 17 நாள்கள் உள்ள நிலையில், முன்பதிவிலேயே தற்போது வரை ₹4.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் நாள்களில் இன்னும் ஈசியாக ₹10 கோடியை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!