News April 26, 2024

நாட்டை விட்டு வெளியேறுவோம் என வாட்ஸ்அப் வாதம்

image

வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால், நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என டெல்லி ஐகோர்ட்டில் அந்நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில், இந்த வாதத்தை வாட்ஸ்அப் முன்வைத்தது. இவ்விதிகளின்படி, குற்றவழக்கு விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில் பயனரின் தகவலை வாட்ஸ்அப் வழங்க வேண்டும்.

Similar News

News September 19, 2025

ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

image

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.

News September 19, 2025

திமுக, தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

image

திமுக, தவெக, தேமுதிக, பாமகவில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் சேலத்தில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மாற்றுக்கட்சியினர் பலரையும் கட்சியில் இணைத்து வருகிறது. அதேநேரம், திமுக மீது அதிருப்தி, மகளிர் உரிமைத்தொகை ₹1,000 கிடைக்கப்பெறாதவர்களை அதிமுகவில் இணைக்க நிர்வாகிகளுக்கு EPS புதிய அசைன்மென்டை கொடுத்துள்ளாராம்.

News September 19, 2025

5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்!

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 24-ம் தேதி வரை மாநிலத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!