News October 25, 2025
இப்போ கொண்டாடி என்ன பிரயோஜனம்?

‘சோழ தேசம் நோக்கி பிரயாணிக்க உள்ளோம்’ என்ற வசனத்திற்கு ஏற்ப வரும் பின்னணி இசையில், இன்றும் நாம் Goosebumps ஆகிறோம். ‘காந்தாரா: சாப்டர்1’ ரிலீஸானபோதும், எங்களிடம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளது என்று தமிழ் ரசிகர்கள் மார்தட்டினர். இப்போது இப்படத்தை கொண்டாடுவதில் எந்த பயனும் இல்லை என்று செல்வராகவன் வேதனைப்பட்டுள்ளார். இப்படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார்.
Similar News
News October 26, 2025
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால், வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள், மாணவர்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..
News October 26, 2025
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக பலி

நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச்சென்ற ஜீப் ஒன்று 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
News October 26, 2025
பள்ளிகளுக்கு இங்கெல்லாம் நாளை விடுமுறை அறிவிப்பு

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக்.27) விடுமுறையாகும். ஏற்கெனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27 அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.


