News March 22, 2024
தோனி எதை செய்தாலும் அதில் அணியின் நலன் இருக்கும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுவது குறித்து போட்டோஷூட்டுக்கு முன்னரே தனக்கு தெரியவந்ததாக சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தோனி விலகியது குறித்து அவர், ‘தோனி எதை செய்தாலும், அணியின் நலனை மனதில் வைத்து தான் இருக்கும். அவருடைய முடிவுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்’ என்றார்.
Similar News
News October 23, 2025
BREAKING: கட்சியில் இருந்து விலகினார்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
News October 23, 2025
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று 2-வது ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ம் ரொம்ப முக்கியம். இந்த போட்டியில் தோற்றால் சீரிஸை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணி முழு திறனையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.