News March 26, 2025
நான் இல்லனா என்னடா பண்ணுவீங்க!

<<15896827>>இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் UPI சேவைகள் இயங்காமல் போனது<<>>. இதனால், பொது மக்களின் வாழ்க்கை கன்னா பின்னா என பாதிக்கப்பட்டது. முடி வெட்டிவிட்டு காசு கொடுக்க முடியாமல் ஒருவர் சிக்கிக்கொண்டார். ஓட்டலில் ஒருவர் சாப்பிட்டு பில் கட்ட முடியாமல் மாட்டிக் கொண்டார். UPI வாழ்வின் அங்கமாகிவிட்ட நிலையில், யாரும் இப்போது பணமே வைத்துக் கொள்வதில்லை. அதன் விளைவு இன்று தெரிந்துவிட்டது.
Similar News
News October 21, 2025
விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
‘ஆரஞ்சு அலர்ட்’ அப்படின்னா என்ன?

24 மணி நேரத்திற்கு 11.5 செ.மீ., – 20.4 செ.மீ., வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 41- 61 கி.மீ) <<18063158>>ஆரஞ்சு அலர்ட்<<>> விடுக்கப்படுகிறது. இதனை பெருமழை அல்லது மிகக் கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். SHARE IT
News October 21, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது. SHARE IT