News August 23, 2024

இந்த வழக்குகளின் கதி என்னவாகும்?

image

திரிபுரா சிட் ஃபண்ட் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லை. 2017இல் DGPஆக சைலேந்திரபாபு இருந்தபோது, பதிவான இந்த வழக்கு, அவரே ரிட்டயர்டாகி சென்றுவிட்ட நிலையிலும், ஒரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமும் போய் சேரவில்லை. இந்நிலையில், ஆருத்ரா, ஹிஜாவு போன்ற வழக்குகளின் கதி என்ன ஆகுமோ? என மக்கள் புலம்பித் தீர்க்கிறார்கள்.

Similar News

News December 7, 2025

தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியம்: வந்தது எச்சரிக்கை

image

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓரிடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 6 வயது முதல் பெரியவர்கள் வரை ப்ளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது. பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.

News December 7, 2025

அன்புமணி பாமக தலைவர் இல்லையா? ராமதாஸ் தரப்பு

image

அன்புமணியை தலைவர் என அறிவித்து ECI அனுப்பிய கடிதங்கள் செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவே அனுமானிக்க வேண்டும். இதனால் தற்போது, பாமகவுக்கு தலைவர் யாரும் இல்லாததால், நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தலைவராகலாம் என்றும், ராமதாஸ் தலைவர் என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று எனவும் கூறியுள்ளார்.

News December 7, 2025

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டத்தின் முக்கியமான கோயில் திருவிழா என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!