News May 7, 2025
இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும்? (2/2)

இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 31, 2025
சீனாவை முந்தியது இந்தியா!

சீன கார்களை விட இந்தியாவில் தயாரித்த கார்களே இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. லைட்ஸ்டோன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அங்கு விற்கப்பட்ட மொத்த கார்களில் ஏறக்குறைய பாதி இந்தியாவில் தயாரானவை. நடப்பாண்டில் SA-ல் விற்கப்பட்ட வாகனங்களில் 49% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதே வேளையில் சீனாவில் இருந்து 17.1% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
News December 31, 2025
₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.
News December 31, 2025
வன்முறையை தூண்டியதாக சீமான் மீது போலீஸில் புகார்

TN-ல் சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசியதாக திராவிட தமிழர் கட்சியின் சார்பில் மதுரை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிராமண கடப்பாரையால் பாழடைந்த திராவிட கோட்டையை இடிப்பேன் என சீமான் பேசியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


