News May 7, 2025
இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும்? (2/2)

இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 15, 2025
ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
News November 15, 2025
BREAKING: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல்லில் வரலாறு காணாத புதிய உச்சமாக முட்டையின் கொள்முதல் விலை ₹5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுதான் அதிகபட்ச விலையாகும். முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சில்லறை கடைகளில் 1 முட்டையின் விலை ₹7 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.
News November 15, 2025
Show-off ஆட்சியில் TN-க்கு எப்படி தொழில்கள் வரும்? EPS

TN-க்கு தொழில் தொடங்க வரவேண்டிய கொரியாவின் ஹ்வாசங் நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள EPS, 4 ஆண்டுகளாக பொம்மை முதல்வர் ஷோ காட்டியதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் ஊழல்கள் என சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியில் எப்படி தொழில் நிறுவனங்கள் TN-க்கு வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


