News May 7, 2025

இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும்? (2/2)

image

இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 27, 2025

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு அறிவித்தது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பொங்கல் தொகுப்பு தயாராக இருப்பதாகவும், ஜன.10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகையாக ₹5,000 வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத காந்தி, அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.

News December 27, 2025

‘புஷ்பா 2’ நெரிசல் மரணம்.. அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு

image

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன் உள்பட 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திரையரங்கு நிர்வாகத்தின் அலட்சியமே, கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு, அவர்களை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்ந்துள்ளனர்.

News December 27, 2025

ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

image

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

error: Content is protected !!