News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (2/2)

அந்த ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 முக்கிய ஆற்று நீர் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி, எவ்வித முடிவும் எடுக்கப்படக் கூடாது. குறிப்பாக, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், புதிய அணைக்கட்டையோ அல்லது நீர் தடுப்பு கட்டுமானத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
Similar News
News February 2, 2026
தர்மேந்திரா இருந்திருந்தால்.. மனைவி ஹேமமாலினி உருக்கம்

பாலிவுட்டின் ஹீ-மேன் என அழைக்கப்பட்ட தர்மேந்திரா உடல்நலக் குறைவால் கடந்த நவம்பரில் காலமானார். மறைவுக்கு பிறகு அவருக்கு பத்ம விபூசண் விருதை மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி, இது தங்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டார். முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் தர்மேந்திராவும் சந்தோஷப்பட்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
டி20 WC பயிற்சி ஆட்டம்: தமிழக வீரர் அதிரடி சதம்!

2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரரான ஜெகதீசன் 49 பந்தில் சதமடித்து (104) அசத்தியுள்ளார். USA-வுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆயுஷ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி 238 ரன்கள் குவித்தது. ஜெகதீசனுக்கு உறுதுணையாக பதோனி (60*), திலக் வர்மா (38) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். கடின இலக்கை நோக்கி ஆடி வரும் USA அணி, 50 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
News February 2, 2026
வங்கி கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு

பிப்.15 முதல் விவசாயிகள் வங்கிக் கணக்கில் குறுவை நெல் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வரவு வைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புக்கு உள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரு வாரத்தில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


