News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (2/2)

அந்த ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 முக்கிய ஆற்று நீர் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி, எவ்வித முடிவும் எடுக்கப்படக் கூடாது. குறிப்பாக, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், புதிய அணைக்கட்டையோ அல்லது நீர் தடுப்பு கட்டுமானத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
Similar News
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 6, 2025
எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.
News December 6, 2025
புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


