News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (1/2)

1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News November 10, 2025
பெரும் சதி முறியடிப்பு: 360Kg வெடிபொருள்கள் பறிமுதல்

சில நாள் முன்பு, JeM உடன் தொடர்புடைய டாக்டரான அடில் ராதர் உ.பி.,-யில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஹரியானாவில் மற்றொரு டாக்டரான முஸம்மில் ஷகில் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 360Kg வெடிபொருள், AK47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 20 டைமர்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுக்கும் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக EPS குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ., மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், 15-ம் தேதிக்கு பின் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்க கோதுமை வாங்கியாச்சா?


