News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (1/2)

1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 27, 2025
இந்த அதிசய மனிதர்களை பற்றி தெரியுமா?

உங்களால் இசையை சுவைக்கவோ, ஒரு நிறத்தை குறிப்பிட்ட ஓசையாக கேட்கவோ முடியுமா? உலகத்தில் உள்ள 5% மக்களுக்கு இந்த சூப்பர் பவர் இருக்கு. இதை சினஸ்தீசியா என்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு ஒரு இசையை கேட்கும்போது கேட்கும் திறன் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு அனைத்து திறன்களுமே தூண்டிவிடப்படுவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது. டெஸ்லா, மர்லின் மன்றோ போன்றவர்களுக்கு சினஸ்தீசியா இருந்ததாக கூறப்படுகிறது.
News October 27, 2025
சற்றுமுன்: இளம் நடிகர் தற்கொலை

பாலிவுட்டில் பிரபலமான ஜம்தாரா 2 வெப் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த இளம் நடிகர் சச்சின் சாந்த்வாடே(25) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசித்துவந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சாஃப்ட்வேர் என்ஜினியரான சச்சின், மராத்தி படங்களின் மூலம் திரையுலகில் அடியெடித்து வைத்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 27, 2025
பிப்.7-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வீடு வீடாக Enumeration Forms வழங்கப்படும். *டிச.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. *டிச.9 முதல் 2026 ஜன.8-ம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். *இறுதிக்கட்ட சரிபார்ப்பு பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும்.


