News March 30, 2025

10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்த இந்தியா? ஆளுநர்

image

200 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தின் உலகின் முதல் நாடாக இருந்த இந்தியா, காலனி ஆட்சியில் மிகவும் பின்னோக்கி சென்றதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை, ஆனால் தற்போது புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2047 சுதந்திர தினத்தின் போது, இந்தியா வல்லரசாக ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

‘தெறி’ ரி-ரீலீஸ் மீண்டும் ஒத்திவைப்பா?

image

மோகன்.ஜி இயக்கியுள்ள ‘திரெளபதி 2’ ஜன.23-ல் ரிலீசாகிறது. அன்று ‘தெறி’ ரி-ரீலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களின் நலன்கருதி கலைப்புலி தாணு இம்முடிவை மாற்ற வேண்டும் என மோகன்.ஜி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தாணு ‘தெறி’ ரீ-ரிலீஸ் வெளியீட்டு முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், தெறி ரீ-ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

News January 19, 2026

ஆ.ராசாவுக்கு எதிராக விசிக.. சிக்கலில் கூட்டணி

image

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனை ‘சாதிக் கட்சி தலைவர்’ என ஆ.ராசா பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விசிகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘RSS கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும், 2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்கிறோம்’ என அவர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 19, 2026

பராசக்தி படம் பார்த்தபின் சீமான் வேண்டுகோள்!

image

பராசக்தி படம் தான் நம் மொழிப்போராட்ட வரலாறு என ஒப்பிட்டு பேசாதீர்கள் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான மொழி போராட்டத்தை எடுத்தால், அப்படம் ரிலீஸே ஆகாது என்றும், அந்த ஜன நாயகம் நம் நாட்டில் இல்லை. ஜன நாயகன் படும்பாடே அதற்கு உதாரணம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாவின் பங்களிப்பும், GV பிரகாஷின் பின்னணி இசையும் நேர்த்தியாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!