News November 29, 2024
வானில் திடீரென பறந்தது என்ன? நடுங்கும் US

ஹாலிவுட் படங்களை போல, விசித்திரமான நிகழ்வுகள் ஏனோ அமெரிக்காவில்தான் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு, நியூயார்க் வான் பகுதியில் 4 லைட்டுகள் திடீரென தோன்றி பறந்தன. அங்கு விமானங்களும் பறக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அப்படியெனில், அவை ஏலியன்களின் விமானங்களா என கேள்வியெழும்பியுள்ளது. அமெரிக்காவில் ஏலியன் கண்காணிப்பு துறை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
Similar News
News August 20, 2025
BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News August 20, 2025
30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?
News August 20, 2025
காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.