News March 19, 2025

ரயில்களில் எவற்றை கொண்டு செல்லக் கூடாது?

image

ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஸ்டவ், தீப்பெட்டி, லைட்டர், பட்டாசு ஆகியவை அடங்கும். தடையை மீறி இவற்றை ரயில்களில் கொண்டு சென்றால், ரூ.1,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சேதம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அவரே பொறுப்பாவார். SHARE IT.

Similar News

News September 19, 2025

மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.

News September 19, 2025

ரயிலில் சிகரெட் பிடித்தால் என்ன அபராதம் தெரியுமா?

image

தட்டிக்கேட்ட ஆளில்லை என பலரும் ரயிலில் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால், ரயிலில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ரயில்வே சட்டம் 167வது பிரிவின் கீழ் சட்டப்படி குற்றமாகும். அப்படி, யாராவது மாட்டினால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தியன் ரயில்வே தரப்பில் இருந்து அந்த பயணிக்கு ₹100- ₹500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 19, 2025

ரோபோ சங்கரின் கனவை தடுத்த காலன்!

image

‘என் பேரனுக்கு நீங்கதான் பெயர் வைக்கணும்’ என்ற அளவுக்கு கமலின் மிக தீவிர ரசிகனான ரோபோ சங்கரின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. ‘ஆளவந்தான்’ படம் பார்க்க கமல் போன்றே மொட்டையடித்துக் கொண்டு சென்ற சங்கருக்கு, கமலுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ‘இந்தியன் 2’-ல் வாய்ப்பு வந்தும் அது நிறைவேறாமல் போக, அவரின் கனவுக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

error: Content is protected !!