News August 17, 2024
குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
Similar News
News December 6, 2025
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

தவெகவின் மா.செ.க்கள், நிர்வாகிகள் சிலர் திமுக, அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், கட்சியின் பேஸ்மெண்ட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இதற்கான ஸ்பெஷல் அசைன்மென்டை செங்கோட்டையனிடம் அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் KAS மா.செ.க்களுடன் மீட்டிங் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா?

உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன். Turritopsis dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து, மீண்டும் தனது ஆரம்ப நிலையான ‘பாலிப்’ (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது. மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது. வேட்டையாடுதல் இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
News December 6, 2025
உக்ரைன் போருக்கு மன்னிப்பு கேட்ட புடினின் சீக்ரெட் மகள்

உக்ரைன் போரை நிறுத்தச்சொல்லி தந்தையிடம் சிபாரிசு செய்யும்படி புடினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் லூயிசா ரோசோவாவிடம் செய்தியாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லூசியா, உக்ரைனில் நடக்கும் போருக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், போருக்கு தான் காரணமில்லை எனவும் போரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


