News August 17, 2024
குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
Similar News
News November 28, 2025
மருத்துவ காலி பணியிடங்கள்: அன்புமணி Vs மா.சு.,

மருத்துவத்துறையில் 12,000 காலிபணியிடங்கள் இருப்பதாக <<18266345>>அன்புமணி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜீரோ காலி பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் எங்கே உள்ளது என்பதை ஆய்வு செய்து காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
News November 28, 2025
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காங்., MLA

கேரளா காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவர் நேரடியாக CM பினராயி விஜயனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மலையாள நடிகை உட்பட பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதமே காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
News November 28, 2025
நடிகர் தர்மேந்திரா மறைவு: ஹேமமாலினி உருக்கம் (PHOTOS)

நீங்கள் விட்டு சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் என நடிகை ஹேமமாலினி, கணவர் தர்மேந்திராவின் மறைவால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமமாலினியை தர்மேந்திரா 2-வது திருமணம் செய்ததால், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நீங்காத நினைவுகளாக இருக்கும் போட்டோக்களை X தளத்தில் ‘Some memorable moments’ என உருக்கமாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.


