News February 12, 2025
நிதியமைச்சர் எந்த கிரகத்தில் வாழ்கிறார்? பிரியங்கா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739329144478_1173-normal-WIFI.webp)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த கிரகத்தில் வாழ்கிறார் என்றே தெரியவில்லை என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். நாட்டில் பணவீக்கம் இல்லை, வேலைவாய்ப்பின்மை இல்லை, விலையேற்றம் இல்லை என்று கூறும் அளவிற்கு நிதியமைச்சர் சென்றுவிட்டதாகவும் அவர் தாக்கி பேசியுள்ளார். கடந்த UPA அரசை காட்டிலும், தற்போதைய NDA அரசாங்கம் மேற்கூறிய விவகாரங்களில் சிறப்பாக செயல்படுவதாக நிதியமைச்சர் பேசியிருந்தார்.
Similar News
News February 12, 2025
செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739341088659_55-normal-WIFI.webp)
அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
News February 12, 2025
இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் ஜாக்பாட் தான்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739339110775_1231-normal-WIFI.webp)
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிப்லாந்த்ரி கிராமத்தில் ஒரு தனித்துவமான வழக்கம் உள்ளது. ஊரில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். மேலும், அக்குழந்தை 21 வயதை அடையும் போது அவளின் பாதுகாப்பிற்காக, கிராமவாசிகள் இணைந்து ₹21,000, பெற்றோர்கள் ₹10,000ஐ fixed depositல் போடுகிறார்கள். இப்பழக்கத்தை 2006ல், ஊர் தலைவராக இருந்த ஷியாம் சுந்தர் கொண்டு வந்துள்ளார்.
News February 12, 2025
படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739339781916_1241-normal-WIFI.webp)
லிபியா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் பயணம் செய்த படகிலிருந்து இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் மாயமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய படகில் பயணம் செய்தவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாகக் குடியேற முயன்றபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.