News August 18, 2024

மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் அடுத்து என்ன?

image

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை CBI நடத்தவுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில், CBI அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றதை அடுத்து, டெல்லியில் இருந்து 25 பேர் கொண்ட CFSL நிபுணர்கள் கொல்கத்தாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் நடக்கவிருக்கும் மனநிலை & குரல் பகுப்பாய்வு சோதனை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 28, 2025

நடிகர் தர்மேந்திரா மறைவு: ஹேமமாலினி உருக்கம் (PHOTOS)

image

நீங்கள் விட்டு சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் என நடிகை ஹேமமாலினி, கணவர் தர்மேந்திராவின் மறைவால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமமாலினியை தர்மேந்திரா 2-வது திருமணம் செய்ததால், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நீங்காத நினைவுகளாக இருக்கும் போட்டோக்களை X தளத்தில் ‘Some memorable moments’ என உருக்கமாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

News November 28, 2025

நெருங்கும் டிட்வா புயல்: வார் ரூமில் CM ஸ்டாலின்!

image

டிட்வா புயலால் <<18411226>>5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ள நிலையில், வார் ரூமில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட CM, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான பணிகளை செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News November 28, 2025

போன் இருந்தா போதும்.. ₹10 லட்சம் காப்பீடு பெறலாம்!

image

PM ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் மருத்துவ காப்பீட்டு பெறலாம். <>NHA beneficiary portal<<>>-ல் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பர் & இருப்பிட சான்றிதழை கொடுத்து இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் 70 வயதை கடந்தோருக்கு ₹10 லட்சமாக வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது. பலரும் இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!