News August 18, 2024
மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் அடுத்து என்ன?

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை CBI நடத்தவுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில், CBI அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றதை அடுத்து, டெல்லியில் இருந்து 25 பேர் கொண்ட CFSL நிபுணர்கள் கொல்கத்தாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் நடக்கவிருக்கும் மனநிலை & குரல் பகுப்பாய்வு சோதனை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 28, 2025
உலகை விட்டு மறைந்தார்

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP
News October 28, 2025
Aggressive அபிஷேக்கை எதிர்கொள்ள தயார்: மார்ஷ்

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.
News October 28, 2025
தவெக நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது

தவெக நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் N.ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துதல், தொண்டர் படை உருவாக்கம் குறித்து
ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் அறிவித்த புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


