News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 21, 2025
OTP 4 அல்லது 6 நம்பர்களில் வருவது ஏன்?

ஆன்லைன் பேங்க் APP, சோஷியல் மீடியாவில் Log In செய்யும்போது Time out ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக OTP-ஐ நாம் உள்ளிடுவோம். இப்படி நீங்கள் அவசரத்தில் பார்க்கும் அந்த OTP நம்பர் எளிதில் நினைவில் நிற்கவேண்டும் என்பதற்காகவே அவை 4 (அ) 6 இலக்கங்களில் வருகின்றன. அதிலும், 4 நம்பர் OTP-ஐ விட 6 நம்பர் OTP கூடுதல் பாதுகாப்பானது என சொல்லப்பட்டாலும், இரண்டுமே எளிதில் நினைவில் நிற்குமாம். SHARE IT.
News December 21, 2025
BREAKING: விலை தடாலடியாக மாறியது

தமிழகத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 55 ஆண்டு கால நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் 10 காசுகள் அதிகரித்திருக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விற்பனையில் 1 முட்டை ₹8-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. உங்க பகுதியில் முட்டை விலை என்ன?
News December 21, 2025
‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

100 நாள் வேலைத்திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஏற்படும் மாற்றங்கள்: *இனி 125 நாள்கள் வேலை உறுதி செய்யப்படும். *இந்த திட்டத்திற்கு முன்பு மத்திய அரசு 90% நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது மத்திய அரசு 60%, மாநில அரசுகள் 40% நிதி ஒதுக்கும். *MGNREGA திட்டத்தில் உள்ள காந்தி பெயர் மாற்றப்படும்.


