News February 16, 2025

மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

image

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.

Similar News

News December 28, 2025

சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: அன்புமணி

image

தமிழகத்தில் என்ன நடக்கிறது என CM ஸ்டாலினுக்கே தெரியவில்லை என அன்புமணி சாடியுள்ளார். நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் தான் கனிமவளக் கொள்ளை அதிகமாக நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM மறுக்கிறார் எனவும், அதனால் திமுகவுக்கு சமூகநீதி பேசத் தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 28, 2025

அனைத்து கட்டடங்களுக்கும் ₹1,000.. TN அரசு நிர்ணயித்தது

image

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு ₹500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ₹1,000 ஆகும். மேலும், சொத்துவரி பெயர் மாற்றத்தின்போதே குடிநீர் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News December 28, 2025

அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

image

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.

error: Content is protected !!