News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News January 5, 2026
வடிவேலு போல EPS: அமைச்சர் சிவசங்கர்

EPS பேசும்போது வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது என அமைச்சர் சிவசங்கர் கிண்டலடித்துள்ளார். அந்த காமெடி சீனை விவரித்த அவர், டீ கடையில் 2 பேர் பேப்பர் படிக்கும்போது தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல தலையிட்டு வடிவேலு உதார் விடுவார். அதேபோல தான், அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால் வந்தது என EPS நடிக்க வேண்டியிருப்பதாக கூறி அவரை சாடியுள்ளார்.
News January 5, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். இந்நிலையில், இந்த விருந்தை புறக்கணிப்பதாக TN காங்., அறிவித்துள்ளது. TN மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், TN மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் கண்ணன் பட்டாம்பி(62) கிட்னி செயலிழப்பு காரணமாக காலமானார். மலையாள திரையுலகில் மெகா பட்ஜெட் படங்கள் சிலவற்றின் Production Controller-ஆக பணியாற்றியுள்ள இவர், புலிமுருகன், ஒடியன், 12th Man போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ‘அரண்’ பட இயக்குநர் மேஜர் ரவியின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


