News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை: கவர்னர்

ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை என கவர்னர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், இங்குள்ள பழங்குடி மக்களிடம், நான் ஒரு இந்தியன் என்பதற்கான ஒரு ஆவணம் கூட இல்லை; இது அவர்களை புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 16, 2025
தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.


