News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News January 9, 2026
ஆட்சியில் பங்கு இப்போது முக்கியமல்ல: கார்த்தி சிதம்பரம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பில் வலுவாக வைக்கப்படுகிறது. இதனிடையே அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவார்கள் என கார்த்தி சிதம்பரம் தெரித்துள்ளார். அதேசமயம் தேர்தல் வெற்றிதான் இப்போது முக்கியம் என்பதால், ஆட்சி அதிகாரம் குறித்து தேர்தலுக்கு பின் பேசிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
News January 9, 2026
வெனிசுலாவின் எண்ணெய் மீதே US-க்கு கண்: டெல்சி ரோட்ரிக்ஸ்

போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல் என வெனிசுலா மீது அமெரிக்க வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒரே நோக்கம் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதுதான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்பின் புதிய <<18796166>>எண்ணெய் ஒப்பந்த<<>> திட்டத்தால் வெனிசுலா அரசு டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளது.
News January 9, 2026
சாக்ரடீஸின் பொன்மொழிகள்

*வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.*வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்தே கிடக்கும் போதுதான் தோல்வி வரும். *நாம் எதை இழந்துவிட்டாலும் இழக்காவிட்டாலும் கௌரவத்தை மட்டும் இழக்கக்கூடாது. இழக்க இடமும் தரக்கூடாது. *உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது.


