News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News January 10, 2026
கொலை வழக்கில் MLA விடுதலை

கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA தளி ராமச்சந்திரனை விடுதலை செய்து, கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு பாஸ்கர் என்பவரை கொலை செய்ததாக தளி MLA ராமச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News January 10, 2026
விஜய்க்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்

‘ஜனநாயகன்’ படத்துக்கு எழுந்த சிக்கலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் ‘ஜனநாயகன்’ வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை என இயக்குநர் விக்ரமன் பதிவிட்டுள்ளார்.. அதேபோல் சென்சார் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என்று இயக்குநர் பா ரஞ்சித் சாடியுள்ளார். நடிகர் சிபிராஜும் விஜய்க்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.
News January 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


