News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. தொடரும் சிக்கல்

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட படத்தை 5 பேர் கொண்ட மறு ஆய்வுக்குழு இதுவரை பார்க்கவில்லை என்று மெட்ராஸ் HC-ல் கூறப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகே படக்குழுவால் கோர்ட்டை நாடமுடியும் என தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.
News January 7, 2026
ICC தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள்!

ஐசிசி டி20 WC வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இந்தியா ’ஏ’ பிரிவில் உள்ளது. இந்நிலையில் ICC தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் யார் என்பதை வலது பக்கம் Swipe செய்து நீங்கள் பார்க்கலாம். இதில் உங்க பேவரைட் யாரு?
News January 7, 2026
கூட்டணி அறிவிப்பு வெளியான உடனே அன்புமணிக்கு அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக EPS சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில், அதிமுகவுடன் மேற்கொண்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது; கட்சி விதிகளின்படி தனக்கு மட்டுமே கூட்டணி குறித்து பேச உரிமை இருப்பதாக அறிவித்து அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜன.9-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


