News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 22, 2025
நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு., ஒருவர் கைது!

தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் மூக்கன்(52) என்பவர் தங்க கணபதியை(48) அரிவாளால் வெட்டினார். இதை அறிந்த தங்க கணபதியின் சகோதரர் முத்துக்குமரன்(46), மூக்கனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தப்பியோடிய முத்துக்குமரனை போலீஸார் கைது செய்தனர்.
News December 22, 2025
ஸ்டாலினுக்கும், EPS-க்கும் தான் போட்டி: ஆர்.பி.உதயகுமார்

தேர்தலுக்கு 4 முனைப்போட்டி நிலவுவதாக சொல்கின்றனர் ஆனால் ஸ்டாலினுக்கும் EPS-க்கும் மட்டும்தான் போட்டி என ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். விளம்பரங்கள் மூலம் பொய் மூட்டைகளை திமுக அவிழ்த்துவிடுவதாக கூறிய அவர், உண்மை என்ன என்பது TN மக்களுக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பணமும் அதிகார பலமும் இருப்பதால் தேர்தலில் ஜெயிக்கலாம் என CM நினைத்தால் அது பகல் கனவாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
பிரபல நடிகர் தற்கொலை

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (46) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மை காலமாகவே, தனிப்பட்ட வாழ்க்கை & மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் வெற்றி பெற்ற ‘IT: சாப்டர் 2’ படத்தில் ஜேம்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபலமான ‘The wire’ வெப் சீரிஸில் ஜிக்கி சோபோட்கா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்திருந்தார்.#RIP


