News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 24, 2025
அவதார் படத்தில் சார்லி சாப்ளின் பேத்தி!

‘அவதார்: Fire & Ash’ படத்தில் கொடூர வில்லியாக மிரட்டிய ஊனா, லெஜண்ட் சார்லி சாப்ளினின் பேத்தி என்பது தெரியுமா? ஆம், இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம். இவரது தாயார் ஜெரால்டின் சாப்ளின் ஒரு நடிகை. இவரது கொள்ளு தாத்தா, நாடகத்தில் நோபல் பரிசு பெற்ற யுகேன் ஓ நீல். ஸ்பானிஷ் – பிரிட்டிஷ் நடிகையான ஊனா, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் சீரிஸில் தலிசா மேகிர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
News December 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 24, 2025
‘பிரியங்கா காந்தியிடம் இந்திரா காந்தியை பார்க்கின்றனர்’

ராகுல், பிரியங்கா ரத்தத்தில் அரசியல் கலந்திருப்பதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இருவரும் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கின்றனர்; கடினமாக உழைக்கின்றனர். நாட்டிற்காக அன்புக்குரியவர்களை இழந்திருக்கின்றனர் என்றார். மேலும், பிரியங்கா காந்தியிடம் மக்கள் இந்திரா காந்தியை பார்ப்பதாகவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


