News March 17, 2025

வந்தே பாரத் ரயில் வேகம் குறைய என்ன காரணம்?

image

நவீனமடைந்து வரும் இந்திய ரயில்வே, அதிவேக சேவையை வழங்க வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், அதன் வேகம் குறைக்கப்பட்டதால் பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் மீது எந்த குறையும் இல்லை; தண்டவாள உள்கட்டமைப்புகள் தான் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

Similar News

News March 17, 2025

ரூ.21,370 கோடி சொத்துகள் பறிமுதல்… அம்மாடியோவ்!

image

2024-2025ம் நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ரூ.21,370 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.4,198 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

News March 17, 2025

இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதி: துளசி

image

இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதிபூண்டு இருப்பதாக USA உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பெண்ணான துளசி கப்பார்ட் டெல்லி வந்துள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமிய தீவிரவாதத்தால் இந்தியா, வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். இது மிகப்பெரிய அச்சுறுத்தல், இது முறியடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News March 17, 2025

குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

image

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!