News March 13, 2025
இந்தியா–மொரிஷியஸ் நெருக்கத்திற்கு என்ன காரணம்?

இந்தியா – மொரிஷியஸ் இடையே சுவாரஸ்யமான பந்தம் இருக்கிறது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 12 லட்சத்தில் 70% பேர் இந்திய வம்சாவளியினர். இது தான் அந்நாட்டுடன் இந்தியா நெருக்கமாக இருக்க முக்கிய காரணம். 2005 முதல் மொரிஷியஸின் மிகப் பெரிய வர்த்தக பார்ட்னராக விளங்குகிறது இந்தியா. இந்திய பெருங்கடலில் இரு நாட்டு இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதும் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
Similar News
News March 13, 2025
‘இந்தி’ டியூசன் டீச்சருடன் உல்லாசமாக இருந்தவர் கைது!

சென்னை அருகே இந்தி டியூசனுக்கு சென்ற நபர், டீச்சருடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (33), 39 வயதான டீச்சரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் தனிமையிலிருந்துள்ளார். 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யத் திட்டமிட்டதால், டீச்சர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால் யோகேஸ்வரன் கைதாகியுள்ளார்.
News March 13, 2025
மாநில தனிநபர் வருமானம் அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் ₹2.78 லட்சமாக அதிகரித்துள்ளது; இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2025
இது நவீன இந்தித் திணிப்பு : அன்புமணி காட்டம்

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.