News May 25, 2024

அண்ணாமலையின் திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை கடந்த சில நாள்களாக அமைதி காக்கிறார். இதற்கு உள்கட்சி பிரச்னை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் ரிசல்ட் வரும்வரை அமைதி காக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 18, 2025

வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

image

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2025

அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

image

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!

News August 17, 2025

நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

error: Content is protected !!