News May 25, 2024
அண்ணாமலையின் திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை கடந்த சில நாள்களாக அமைதி காக்கிறார். இதற்கு உள்கட்சி பிரச்னை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் ரிசல்ட் வரும்வரை அமைதி காக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 7, 2026
நெஞ்சு சளி விரட்டும் கசாயம்!

➤தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ➤செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.
News March 7, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக புதிய தமிழகம், தேசிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், தேசிய திராவிட கழக பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்தியா, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று அல்லது நாளை EPS-ஐ நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை நித்தியா வழங்கவுள்ளார்.
News March 7, 2026
காங்கிரஸ் வேட்பாளர்கள்.. CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்நிலையில், 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் தொகுதியில் செல்வாக்கு, செலவு செய்யத் தயாராக இருப்பவரை களமிறக்க வேண்டும் என காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.


