News February 17, 2025
மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை?

TNல் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை என இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆரம்பக் கல்வியில் தாய்மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறிய அவர், கல்வியாளர்கள், வல்லுநர்களின் ஆலோசனைப்படியே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக்கொள்கை மிகவும் அவசியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 1, 2025
இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை… ரெடியா இருங்க!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை மட்டுமே. 5 ஞாயிற்றுக் கிழமைகளிலும் (நவ.2, 9, 16, 23, 30) வங்கிகள் இயங்காது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (நவ.8, 22) விடுமுறையாகும். மற்ற 23 நாள்களிலும் தமிழகத்தில் வங்கிகள் முழுநேரமும் செயல்படும். இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.
News November 1, 2025
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்

பிக்பாஸ் 9-வது சீசன் தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வார எலிமினேட் பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகள் பெற்று கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 1, 2025
1.12 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்

AI-ன் வரவால், நடப்பாண்டில் இதுவரை சர்வதேச அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக UPS 48,000, INTEL 24,000, TCS 20,000, அமேசான் 14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. ஐடி, கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.


