News May 20, 2024
காணாமல் போன தமிழர்களின் கதி என்ன?

இலங்கையில் 1983 – 2009 வரை காணாமல் போன 1.40 லட்சம் தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், மாயமானவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதுடன், இதற்கு சிங்கள ராணுவம் & பாதுகாப்பு படையினர்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. அரசியலில் பரபரப்பு மாற்றம்!

தமிழக தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி அமைக்காத ராமதாஸ், சசிகலா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், திமுக, அதிமுக இல்லாத விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு, வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு களமிறங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
News March 11, 2026
இப்படி விளக்கேற்றுங்கள்.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில், பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரித்து செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது.
News March 11, 2026
உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(11.03.2026) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 118(₹10,844) உயர்ந்து $5,214 ஆக மாறியுள்ளது. மேலும், வெள்ளி 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $88-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையில் <<19342889>>நேற்று சவரனுக்கு ₹800<<>> உயர்ந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.


