News April 25, 2025
தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.
Similar News
News January 15, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News January 15, 2026
பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?
News January 15, 2026
9 பாகிஸ்தான் மீனவர்கள் அதிரடி கைது

இந்திய கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் (ICG) அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் ICG விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.


