News December 28, 2024
மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.
Similar News
News July 9, 2025
இந்திய கடற்படையில் 1,040 காலியிடங்கள்

இந்திய கடற்படையின் பல்வேறு துறைகளில் உள்ள Group-B மற்றும் C பதவிகளில் 1,040 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இந்த மாதம் 18-ம் தேதி கடைசி நாளாகும். SC, ST, PH மற்றும் பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் ₹295 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். முழு விவரங்களுக்கு இங்கே <
News July 9, 2025
நெகட்டிவ் ரிவ்யூ வர காரணம் என்ன? இயக்குநர் ஓபன் டாக்

நல்ல திரைப்படங்களுக்கு கூட நெகட்டிவ் ரிவ்யூ வருவது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘மெய்யழகன்’ படத்திற்குகூட இந்த நிலை வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர்களிடம் பணம்பெறும் நோக்கத்துடன் 90% ரிவ்யூவர்ஸ் செயல்படுவதாக ‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் சினிமா நெகட்டிவ் ரிவ்யூவால் பெரிய பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜகன் மோகன் ராவை சிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. ஐபிஎல்-2025 போட்டி டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் போட்டியின்போது டிக்கெட் ஒதுக்கீடு தொடர்பாக சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டது.