News January 7, 2025
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் 1.66 கோடி மகளிர் விண்ணப்பித்திருந்த நிலையில், நிபந்தனைகள் அடிப்படையில் 1.15 கோடி பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 13, 2025
வாகனங்களுக்கு ஒரே நம்பர் பிளேட்; விஜய்யின் Sentiment?

திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள விஜய்யின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நம்பர் பிளேட் உள்ளது. TN 14-0277 என்ற நம்பரை அவர் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர், இது அவரது தங்கையின் பிறந்ததேதி எனவும் இன்னொரு தரப்பினர் ’1977’ MGR முதல்வரான வருடம் எனவும் Decode செய்து வருகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் செண்டிமெண்ட் என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News September 13, 2025
குறட்டை வராமல் தடுப்பது எப்படி?

தூங்கும்போது நமது நாக்கு தொண்டை பகுதியில் சிக்கிக் கொள்வதால் குறட்டை வருவதாக கூறப்படுகிறது. அதனை தவிர்க்க வழிகள் உள்ளன. தலையை சற்று உயர்த்தி படுக்க 2 தலையணை பயன்படுத்துங்கள். மது, சிகரெட் பழக்கமுள்ளவர்கள் அதனை குறையுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நேராக படுக்காமல், இடது (அ) வலது புறம் திரும்பி படுங்கள். குறட்டை விடும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
மக்கள் மீது சுமையை மட்டுமே திமுக ஏற்றியுள்ளது: EPS

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்தையும் உயர்த்தி, மக்களின் சுமையை அதிகரித்துவிட்டதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுகவின் திட்டங்களை நிறுத்திய ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்றும், குடும்பத்தின் நலன்களை மட்டும் அவர் சிந்திப்பார் எனவும் EPS விமர்சித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லிய பலவற்றை நிறைவேற்றாமல், இப்போது வெற்று நாடகத்தை திமுக போடுவதாகவும் சாடினார்.