News October 21, 2025

எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று என்ன அலர்ட்?

image

*அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
*மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி.
*கனமழைக்கான மஞ்சள் அலர்ட்: ராணிப்பேட்டை, தி.மலை, திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

Similar News

News October 21, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

image

காலையில் ஆபரணத் <<18061425>>தங்கத்தின் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்த நிலையில், மாலையில் தடாலடியாக சரிவை சந்தித்துள்ளது. தற்போது, 1 சவரன் ₹1,440 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

News October 21, 2025

நிறைவேறியது பூஜா ஹெக்டேவின் ஆசை

image

‘ரெட்ரோ’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது தனக்கு நானியுடன் சேர்ந்து நடிக்க ஆசை என பூஜா ஹெக்டே கூறியிருந்தார். இந்நிலையில், சுஜீத் இயக்கத்தில் நானி நடிக்கும் ‘Bloody romeo’ படத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பல படங்களில் நானி பிசியாக இருப்பதால், சுஜீத் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங், அடுத்த ஆண்டில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

News October 21, 2025

பருவமழையை எதிர்கொள்ள IAS அதிகாரிகள் நியமனம்

image

TN-ல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு IAS அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க CM அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!