News March 15, 2025
என்ன சொல்ல வருகிறார் செங்கோட்டையன்? (2/2)

கோவை அன்னூரில் இபிஎஸ்ஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் விரிசல் வெளியே தெரிய ஆரம்பித்தது. விழா அழைப்பிதழில் எஸ்.பி.வேலுமணிக்கு கீழ் அவரது பெயர் இடம்பெற்றது தான் செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணிக்க, காரணம் என கூறப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற ஐடியாவை இபிஎஸ் பரிசீலிக்காததும் செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்த காரணம் என்கிறது அதிமுக வட்டாரம்.
Similar News
News March 15, 2025
நாய் கீறி விட்டதா? இதை செய்ய மறக்காதீங்க

வேலூரில் ரமேஷ் (49) என்பவரை, நாய் கீறிவிட்டுள்ளது. அவரும் அதை பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வரவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டும் டாக்டர்கள், நாய் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமல்ல, கீறினாலும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, தடுப்பூசி போட மறக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர்.
News March 15, 2025
இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
News March 15, 2025
மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்

மக்களின் நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறும்போது அவர்களது செயல்கள் தடம் மாறுகின்றன. போபாலில் 6 மாத குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருக்க, அதற்கு பேய் பிடித்திருப்பதாக மாந்திரீகர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், பேய் ஓட்டுவதாக கூறி, நெருப்பின் மேல் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.