News September 5, 2025

என்ன பேசப்போகிறார் செங்கோட்டையன்?

image

TN அரசியல் களம் காலை 9.30 மணிக்காக காத்திருக்கிறது. குறிப்பாக, அதிமுகவினர் பெரும் தகிதகிப்பில் உள்ளனர். 1.மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஒன்றிணைப்பு, 2.பாஜகவுடன் கூட்டணி வேண்டாம், 3.அரசியலை விட்டு விலகுகிறேன். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத்தான் செங்கோட்டையன் பேசப்போவதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதில், எந்த முடிவை அவர் எடுத்தாலும், EPS-க்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. என்ன பேசுவார்?

Similar News

News September 7, 2025

மனிதனின் கண்ணில் பல் வளர்ந்த அபூர்வம்

image

கண்ணில் பல் வளருமா? ஆச்சரியமா இருக்குல்ல. பாட்னாவில் 42 வயது நபருக்கு அப்படி நடந்துள்ளது. அவரது கண்ணின் கீழ் பகுதியில் கட்டி போன்ற புண் முதலில் உருவாகியுள்ளது. ஹாஸ்பிடலில் பரிசோதித்தபோது, கண்ணின் கீழ் பகுதியில் அவருக்கு பல் வேர்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அதனை நீக்கியுள்ளனர். பல் உருவாக்கும் தன்மை திசை மாற்றம் அடைந்தால் இப்படி நடக்குமாம்..

News September 7, 2025

குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு CM பாராட்டு

image

திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில் இசை வடிவில் லிடியன் நாதஸ்வரமும், அமிர்தவர்ஷினியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த அற்புதமான படைப்பை CM ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இருவரையும் வாழ்த்துவதாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை நீங்கள் Spotify-ல் கேட்கலாம்…

News September 7, 2025

ராகுலை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ED சம்மன்

image

ராகுல் காந்தி UK குடியுரிமை பெற்றிருப்பதாக, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான ஆவணங்களை வரும் 9-ம் தேதி நேரில் வந்து வழங்குமாறு விக்னேஷுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ராகுல் இந்திய தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என விக்னேஷ் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!