News June 28, 2024
விதி எண் 110 என்றால் என்ன?

விதி எண் 110 என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 208ஆவது பிரிவின் 1ஆவது உட்பிரிவின்படி, இயற்றப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்றாகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளைப் பற்றி அவசர அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதனை அவை விதி எண் 110இன் கீழ் அறிவிக்கலாம். இந்த அறிவிப்பின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால், அது குறித்து எந்த விதமான விவாதமும் நடத்தப்பட மாட்டாது.
Similar News
News October 20, 2025
‘நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

பெங்களூருவில் ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் 28 பக்க தற்கொலை கடிதத்தில், ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால், மற்றுமொரு உயரதிகாரி இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாலும், சம்பளத்தை இழுத்தடித்ததாலும் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து CEO பவிஷ் மீது FIR போடப்பட்டுள்ளது. அலுவலக டார்ச்சர் இந்த அளவுக்கு இருக்குமா?
News October 20, 2025
நண்பனுக்காக கனவை விட்டுக்கொடுத்த வருண்

நடுத்தர குடும்பத்திலிருந்து முன்னேறி செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒருசில விலையுயர்ந்த பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையில் தான் ₹3 லட்சம் மதிப்பிலான வாட்ச்சை வருண் சக்கரவர்த்தி வாங்கியுள்ளார். ஆனால், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தனது நண்பர்கள் மத்தியில் இந்த வாட்ச்சை அணிவது, தனக்கு சங்கடத்தை தருவதாக வருந்தியுள்ளார். வருணின் ஃபீலிங் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News October 20, 2025
தனி மனிதரை திருப்திப்படுத்த முடியாது: மாரி செல்வராஜ்

தென் மாவட்டங்களை பற்றிய பொதுவான Narrative-ஐ மாற்றுவதே எனது நோக்கம் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ உள்பட அவரது அனைத்து படங்களும் தென் பகுதிகளில் சாதிய மோதலை தூண்டுவதாக உள்ளது என ஹரி நாடார் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு தனி மனிதரையும் என்னால் திருப்திபடுத்த முடியாது என்றார். ‘மாரி செல்வராஜ் ஒரு சாதிய எதிர்ப்பாளர்’ என்ற முத்திரையே குத்தப்படும் என்றும் கூறினார்.