News October 21, 2025
‘ஆரஞ்சு அலர்ட்’ அப்படின்னா என்ன?

24 மணி நேரத்திற்கு 11.5 செ.மீ., – 20.4 செ.மீ., வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 41- 61 கி.மீ) <<18063158>>ஆரஞ்சு அலர்ட்<<>> விடுக்கப்படுகிறது. இதனை பெருமழை அல்லது மிகக் கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். SHARE IT
Similar News
News October 22, 2025
மழைக்காலத்தில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..

*ஈரமான கையோடு சுவிட்ச் on/ off செய்ய வேண்டாம்.
*மின்சார கம்பிகள் அறுந்திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
*இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மொபைல், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.
*குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம். *பழச்சாறுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். *பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
News October 22, 2025
BREAKING: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN-ல் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.
News October 22, 2025
ரோஹித், கோலிக்கு ஆஸி., தொடர் முக்கியம்: பாண்டிங்

ரோஹித் சர்மா, விராட் கோலி அடுத்த 2027 WC வரை விளையாடுவார்களா என்ற கேள்வி ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனிடையே, WC வரை இருவரும் விளையாடுவார்களா என்பதை ஆஸ்திரேலியா தொடர் தீர்மானிக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு சிறிய இலக்குகளை வைத்து இருவரும் பயணிப்பதே சிறப்பாக இருக்கும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.