News November 28, 2024

தற்காலிக புயல் என்றால் என்ன?

image

பெங்கல் புயல் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தற்காலிக புயல் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், புயல் வடிவில் அது இலங்கையை முதலில் கடக்கிறது. பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி கரையை கடக்கிறது. அதனாலேயே அதற்கு தற்காலிக புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

தங்க நிற கவுனில் மின்னும் தமன்னா..!

image

அண்மையில் பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா நடத்திய INAYA பேஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்துக் கொண்டார். மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த தங்க நிற கவுனை அணிந்துக்கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வைரல் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பாருங்கள்.

News August 20, 2025

ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

image

*1944 – இந்தியாவின் 6-வது பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்ததினம்.
*1946 – இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர் நாராயணமூர்த்தி பிறந்ததினம்.
*1858 – சார்லஸ் டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார்.
*1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
*1977 – நாசா வாயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
*மத நல்லிணக்க தினம் இன்று.
*உலக கொசு தினம் இன்று.

News August 20, 2025

EPS-க்கு எதிராக போலி அறிக்கை : ஆம்புலன்ஸ் சங்கம்

image

வேலூர் அருகே அணைக்கட்டில் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் EPS கண்டித்தார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதலும் நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் இந்த அறிக்கை தாங்கள் வெளியிடவில்லை என்றும், சங்க லெட்டர் பேடை அவதூறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!