News March 1, 2025
நிழல் பட்ஜெட் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன், நிழல் பட்ஜெட் வெளியிடுவதை பாமக வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில், அரசு பட்ஜெட்டில் இந்த இந்த அம்சங்கள் இடம் பெறலாம் என்று விளக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள அம்சங்களை பல நேரங்களில் நிதியமைச்சர் எடுத்துக் கொள்வதும் உண்டு. வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், நிதிப்பகிர்வு ஆகியவை நிழல் பட்ஜெட்டிலும் இடம்பெறும்.
Similar News
News March 1, 2025
சதம் விளாசிய கருண் நாயர்

ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வீரர் கருண் நாயர், சதம் விளாசி அசத்தியுள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர், 132 (280) ரன் குவித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர், இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.
News March 1, 2025
சீமான் பாதுகாவலருக்கு ஜாமின்

சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நடிகை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க ஒட்டிய சம்மனை கிழித்தது, போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
+2 Exam.. மாணவர்களுக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட வேண்டாம். மீறி விடைத்தாள் பரிமாற்றம், ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால், 1 – 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை அல்லது நிரந்தரமாக படிக்கத்தடை விதிக்கப்படும். இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படலாம் என அலர்ட் கொடுத்துள்ளது.