News May 23, 2024

உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால்? (3/3)

image

1945இல் 2ஆம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலில் 2.26 லட்சம் பேர் மாண்டதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தாக்குதலின் தீவிரம் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆதலால், இன்னொரு பேரழிவை மனித குலம் தாங்குமா? என சிந்தித்து, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்பதே உலக நாடுகளின் வேண்டுகோளாகும்.

Similar News

News March 10, 2026

நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்த உத்தரவு

image

+2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளது. அதன்படி, *பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது.

News March 10, 2026

‘சிலிண்டர் தட்டுப்பாடு’ PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம்

image

USA- ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வணிக சிலிண்டர் உபயோகிக்கும் உணவகங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவும், கூடுதல் மின்சாரத்தை வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 10, 2026

எண்ணெய் நெருக்கடி.. சீனா ஏன் பயப்படவில்லை?

image

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், ஈரானிடமிருந்து 90% எண்ணெய் வாங்கும் சீனா சிறிதும் கவலையின்றி இருக்கிறது. ஏனெனில், பெரிய அளவிலான தள்ளுபடியில் எண்ணெய் வாங்கும் சீனா, 140 கோடி பீப்பாய்களை அவசரகால இருப்பாக வைத்துள்ளது. சீனாவில் மின்சார வாகனங்கள் அதிகரிப்பால் எண்ணெயை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளின் விநியோகம் நின்றாலும் ரஷ்யாவிடமிருந்து வாங்க மாற்று வழியும் உள்ளது.

error: Content is protected !!