News April 17, 2025
சிவராஜ்குமார் பெண்ணாக பிறந்திருந்தால்?

சிறுவயதில் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துவிட்டு 3 நாள்கள் குளிக்காமல் இருந்ததாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கமலின் ஆரா மற்றும் ஸ்மெல் தன் மீது இருக்க வேண்டும் என நினைத்து அப்படி செய்ததாகவும், அந்த அளவிற்கு அவருடைய ரசிகன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை தான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக திருமணம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
இந்த அறிகுறிகள் தெரியுதா.. கல்லீரலில் பிரச்னை இருக்கு!

இன்று கல்லீரல் நாள். கல்லீரல் பிரச்னை இருந்தால், நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். நன்றாக சாப்பிட்டாலும் சோர்வு,
மஞ்சள் காமாலை, அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது வீக்கம், வாந்தி, எளிதில் ரத்தப்போக்கு, கால் வீக்கம் அல்லது கால்களில் அரிப்பு போன்ற அறிகுறிகளை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். SHARE IT.
News April 19, 2025
என் உயிராடுற.. என்னடி மாயாவி நீ…

பிகில் புகழ் அம்ரிதா ஐயரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு படுவைரலாகி வருகிறது. ஓவர் மேக்-அப் இன்றி, அழகிய ஆரஞ்ச் நிற சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த, நெட்டிசன்கள் நேற்று முதல் தங்களது தூக்கத்தை தொலைத்து விட்டனர். ‘றெக்க மட்டும் இருந்த அம்ரிதா தேவதைடா’ எனவும் வர்ணித்து வருகின்றனர்.
News April 19, 2025
அசாமில் மீண்டும் நில அதிர்வு

வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று காலை 7.38 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 25 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவில் 2.9 வரை நில அதிர்வு பதிவானதால் கட்டடங்கள் மிக லேசாக குலுங்கின. இதற்கு முன் கடந்த பிப்.27 தேதி 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.