News March 10, 2025
ஜெயலலிதா இன்று இருந்திருந்தால்?

ஜெயலலிதா உயிரோடு இருக்கையில், அதிமுகவினர் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தது இல்லை. கூட்டணி குறித்து பேட்டி அளித்தது இல்லை. ஆனால், அண்மையில் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் விவகாரம், கூட்டணி குறித்த மூத்த தலைவர்கள் பேட்டி உள்ளிட்டவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மட்டும் இன்று இருந்திருந்தால், இதுபோல நடக்குமா? என அவர்கள் பேசி வருகின்றனர்.
Similar News
News March 10, 2025
டாக்டர் வேல்முருகேந்திரன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

வயது மூப்பின் காரணமாக இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சி.யு. வேல்முருகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, சி.யு.வேல்முருகேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
News March 10, 2025
150 கோடியாம்… வசூலில் ஃபயர் விடும் ‘டிராகன்’…!

தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. அவரது நடிப்பில் 2வது படமாக ரிலீசான ‘டிராகன்’, அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சில நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வசூல் ரூ.150 கோடியை நெருங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 10, 2025
மூடநம்பிக்கையின் உச்சம்… பூனையை எரித்த கொடூரம்!

உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் பெண் ஒருவர் வெளியே புறப்பட்டபோது காட்டுப் பூனை குறுக்கே சென்றதாம். இதனை அபசகுணமாக எண்ணிய அவர், நண்பர்கள் உதவியுடன் அந்த பூனையை பிடித்து உயிரோடு எரித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூனையை கொன்றதாக பெண், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.