News April 11, 2024

பறக்கும் படை பறிமுதல் செய்த பணம் என்னவாகும்?

image

பறக்கும் படை அதிகாரிகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்திருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கப்படும்.

Similar News

News August 12, 2025

திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்

image

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக அரசு இயற்றாதது ஏன் சிபிஎம் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது புரியாத புதிராக இருப்பதாக கூறிய அவர், இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து EPS பேசாதது ஏன் என்று கேட்ட அவர், சொந்த முகவரியை இழந்து நிற்கிற கட்சி என்றால் அது அதிமுகதான் என விமர்சித்தார்.

News August 12, 2025

தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு

image

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

News August 12, 2025

OPSஐ விமர்சிக்க கூடாது: பாஜக உத்தரவு

image

OPS-ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA-வில் தொடர்ச்சியாக OPS ஓரங்கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் PM மோடியுடன், அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பக்கம் மீண்டும் செல்வாரா OPS ?

error: Content is protected !!