News April 11, 2024
பறக்கும் படை பறிமுதல் செய்த பணம் என்னவாகும்?

பறக்கும் படை அதிகாரிகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்திருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கப்படும்.
Similar News
News April 25, 2025
LoC என்றால் என்ன?

Line of Control என்பது J&K, லடாக்கில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்களை பிரிக்கும் பகுதியாகும். 1972 சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு LoC நடைமுறைக்கு வந்தது. 1947 போருக்கு பிறகு, 1949-ல் கொண்டுவரப்பட்ட இது Cease Fire Line (CFL) என அழைக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி 1965, 1971-ல் பாக். போரில் ஈடுபட்டதால், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகி, LoC-ஐ கொண்டு வரப்பட்டது.
News April 25, 2025
தமிழ்நாட்டில் காவல் ராஜ்ஜியம் நடக்கிறதா?… கவர்னர்

துணை வேந்தர்களை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்த விதம் எமர்ஜென்சியை நினைவூட்டுவதாக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி VC-க்களை CM தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊட்டி சென்ற VC-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? VC-க்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.