News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News December 10, 2025

ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

image

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.

News December 10, 2025

அதிமுக ஆட்சியில் பங்கு கிடையாது: தம்பிதுரை

image

2026 தேர்தலில் வெற்றிபெற்று EPS ஆட்சியமைப்பார்; அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என விஜய் அறிவித்தபின் தமிழக அரசியல் களமே மாறியிருக்கிறது. குறிப்பாக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசி வரும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

வரும் 31-ம் தேதிக்குள் இதெல்லாம் செஞ்சிடுங்க!

image

இந்த விஷயங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தவறாமல் முடித்து விடுங்கள். ✱பான் ஆதார் இணைப்பு ✱2024–25 நிதியாண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ✱மலிவு விலையில் வீடு கட்டி கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பித்து விடுங்கள் ✱இவற்றுடன் 2025–26 நிதியாண்டுக்கான 3-ம் தவணைக்கான Advance Tax செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.

error: Content is protected !!