News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News April 29, 2025
PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.
News April 29, 2025
பஜாஜின் புது EV ஸ்கூட்டர்.. என்னென்ன அம்சங்கள்?

புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
News April 29, 2025
இன்னும் நிறைய இருக்கு சாம்பியன்: யூசுஃப் பதான்

IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.