News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News December 3, 2025

BREAKING: கொந்தளித்தார் விஜய்

image

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாததால் கொஞ்சமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். மீதமுள்ள காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் களத்திற்கு சென்று உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 3, 2025

BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

image

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

News December 3, 2025

இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

image

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!