News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News November 3, 2025

புறக்கணித்த EPS, விஜய், சீமான்.. இதுதான் காரணம்

image

SIR-க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் ADMK, PMK, TVK, NTK, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது சோசியல் மீடியாவில் சர்ச்சையானது. ஆனால், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது திமுக; அரசு கிடையாது. அதனால்தான் தனியார் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் எப்படி இக்கூட்டத்தில் பங்கேற்கும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News November 3, 2025

Wheel Chair-ல் பிரதிகாவின் கொண்டாட்டம்!

image

கோப்பையை கையில் ஏந்த இந்திய அணியினர் ரெடியான போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி அதை ரசித்து கொண்டிருந்தார் பிரதிகா ராவல். அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன், அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் இருந்த படியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது

News November 3, 2025

திமுக கூட்டணியில் தேமுதிகவா?

image

SIR தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் EPS மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா, திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில், தேமுதிக பங்கேற்றது கூட்டணிக்கு அச்சாராமா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!