News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 22, 2025
பிரபல நடிகர் தற்கொலை

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (46) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மை காலமாகவே, தனிப்பட்ட வாழ்க்கை & மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் வெற்றி பெற்ற ‘IT: சாப்டர் 2’ படத்தில் ஜேம்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபலமான ‘The wire’ வெப் சீரிஸில் ஜிக்கி சோபோட்கா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்திருந்தார்.#RIP
News December 22, 2025
டிகிரி போதும், ₹51,000 சம்பளம்: நாளையே கடைசி!

SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: டிகிரி. தேர்ச்சி முறை: Shortlisting, Interview, Final Selection. வயது: 26- 35 வரை. சம்பளம்: ₹51,667. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23-ம் தேதி. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE THIS.
News December 22, 2025
இந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் குற்றம்!

உலகில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் சில நாடுகளில் மட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. வட கொரியா, சோமாலியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, புருனேவில் பைபிள் வைத்திருந்தால்கூட 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் சுமார் ₹17 லட்சம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.


