News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News September 19, 2025
மாதவிடாய் காலத்தில் தொடவே கூடாத உணவுகள்

மாதவிடாய் காலத்தின் போது ஹார்மோன் சுழற்சியால் இனிப்பு/காரமான உணவுகளை சாப்பிட பெண்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அப்படி செய்வதால் ரத்தப்போக்கு அதிகரித்து, வலி ஏற்படலாம். எனவே, மாதவிடாயின் போது சில உணவுகளை பெண்கள் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். அது என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 19, 2025
நடிகர் ரோபோ சங்கர் மறைந்தார்.. கடைசி PHOTO

நகைச்சுவை <<17754481>>நடிகர் ரோபோ சங்கரின்<<>> மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரியாலிட்டி ஷோ மூலம் வளர்ந்து வெள்ளித்திரையில் ஜொலித்து வந்த அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், தனது கடும் முயற்சியால் மெல்ல மீண்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIPROBOSANKAR
News September 19, 2025
BREAKING: ரஷ்யாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கம்சட்கா பகுதியிலேயே கடலுக்கு அடியில் 128 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் நள்ளிரவிலும் அலறியடித்து வெளியேறினர்.