News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 30, 2025
ரஜினியின் லிஸ்ட்டில் அஸ்வத் மாரிமுத்து?

சுந்தர்.சி வெளியேறி நிலையில், கமல் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ‘டிராகன்’ அஸ்வத் மாரிமுத்து ரஜினியிடம் கதை ஒன்றை கூறினாராம். அது அவருக்கு மிகவும் பிடித்து போக, அக்கதையில், கமலின் RKFI தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
News December 30, 2025
ஒரேநாளில் ₹23,000 குறைந்தது.. ALL TIME RECORD

இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹23 குறைந்து ₹258-க்கும், கிலோ வெள்ளி ₹23,000 குறைந்து ₹2,58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை கிலோவுக்கு ₹41,000 உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
News December 30, 2025
LPG கேஸ்: இதை செய்யலன்னா பெரிய RISK!

LPG சிலிண்டரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த சில வழிகள் உள்ளன. ➤சிலிண்டரை சாய்த்து வைக்க வேண்டாம் ➤காற்றோட்டமான இடத்தில் வையுங்கள் ➤வெப்பம் அதிகமாக உள்ள இடத்திலோ, மின்சாதனங்களுக்கு அருகிலோ வைக்க வேண்டாம் ➤சமைக்கும்போது நைலான் & பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம் ➤சிலிண்டரை அடுப்போடு இணைக்கும் ரப்பர் குழாயை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். SHARE.


