News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News December 14, 2025

ஜூஸ், பிஸ்கட், தண்ணீர், நொறுக்குத் தீனிகள் ரெடி!

image

தி.மலையில் மாலை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மண்டல மாநாட்டில் 1.30 லட்சம் பேருக்கு பிஸ்கட், ஜூஸ், கடலை பர்பி, மிக்சர் உள்ளிட்ட 9 பொருள்கள் அடங்கிய சிற்றுண்டி பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வடக்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்றைய மாநாட்டில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து 91 தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News December 14, 2025

BREAKING: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அறிவிப்பு

image

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அரசு திட்ட சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. MERA KYC, FACE RD ஆகிய ஆப்கள் மூலம் செல்போனிலேயே ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்!

News December 14, 2025

தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

image

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

error: Content is protected !!