News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 30, 2025
பாரதியின் கனவு PM மோடியால் நிறைவேறுகிறது: CPR

ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி CPR உரையாற்றினார். அதில், தர்மத்தின்படி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாரதி கண்ட கனவு PM மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை அவர் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். காசி – ராமேஸ்வரம் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என்றும் கூறினார்.
News December 30, 2025
SKY எனக்கு அடிக்கடி மெஸேஜ் செய்வார்: பாலிவுட் நடிகை

இந்திய டி20 கேப்டன் SKY குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியது பேசுபொருளாகியுள்ளது. பேட்டி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களில் SKY தனக்கு அடிக்கடி மெஸேஜ் அனுப்பியதாகவும், ஆனால் தற்போது இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்களை டேட் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது கருத்துக்கு SKY இன்னும் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.
News December 30, 2025
திமுக அரசுக்கு பயம்: அன்புமணி

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான தனது அறிக்கையில், சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என திமுக அரசு அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


