News April 28, 2025

வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News December 15, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பெண் ஒருவர் தனது மகன், மருமகளுடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், கந்து வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், முழு தொகையையும் திருப்பி அளித்தும் மேலும் பணம் கேட்டு ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்: ஜெயகுமார்

image

எவ்வளவு அதிக சீட்டுகள் கேட்டாலும், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்பதை EPS தான் முடிவு செய்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதிக்கு மாறப்போவதாக வரும் தகவல்கள் வதந்தி என கூறிய அவர், ‘வெற்றியோ, தோல்வியோ… எந்த காலத்திலும் ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்’ என்று குறிப்பிட்டார். 25 ஆண்டுகள் வெற்றியை தேடித்தந்தவர்கள் ராயபுரம் மக்கள் என்றும் அவர் கூறினார்.

News December 15, 2025

BREAKING: தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் 1 சவரன் ₹720 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹440 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹12,515-க்கும், 1 சவரன் ₹1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!