News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News January 7, 2026
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் ஜன.9-ல் தீர்ப்பு வழங்கப்படும் என மெட்ராஸ் HC தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, தணிக்கை வாரியம் விதிகளை காற்றில் பறக்கவிட்டதாக படக்குழு குற்றஞ்சாட்டியது. கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், உடனடியாக சான்றிதழ் வழங்குவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 7, 2026
அடுத்த விண்வெளி புரட்சிக்கு தயாராகும் இந்தியா!

பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘OrbitAID Aerospace’ புதிய வரலாறு படைக்க உள்ளது. விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும், இந்தியாவின் முதல் ‘AayulSAT’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதனை, வரும் 12-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, ஏவுதலுக்கான செலவுகளையும், விண்வெளி குப்பைகளையும் குறைக்கலாம்.
News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. தொடரும் சிக்கல்

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட படத்தை 5 பேர் கொண்ட மறு ஆய்வுக்குழு இதுவரை பார்க்கவில்லை என்று மெட்ராஸ் HC-ல் கூறப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகே படக்குழுவால் கோர்ட்டை நாடமுடியும் என தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.


