News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News January 1, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முதல் நாளே வந்த அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இம்மாதம் ரேஷன் பொருள்கள் வீடு தேதி வரும் தேதி வெளியாகியுள்ளது. ஆம்! ஜன.4, 5-ல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை முதல் மாவட்டமாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 1, 2026
முட்டைகோஸால் மரணமா?

உபி.,யில் தீராத தலைவலியால் அவதியுற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் 8 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தபோது பலியாகியுள்ளார். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவி சாப்பிட்ட உணவு வழியே முட்டைக்கோஸில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி மூளைக்குள் நுழைந்து, இந்த கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.
News January 1, 2026
100 கோடி இந்தியர்களின் கைகளில் ‘இணையம்’

இந்தியாவின் Broadband சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025, நவம்பர் மாதத்தில் 100 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்று 100 கோடியாக வளர்ந்துள்ளது. இதில், ஜியோ 51 கோடி பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 2-வது இடத்திலும் (31.42 கோடி), VI 3-வது இடத்திலும் (12.77 கோடி பேர்), BSNL 4-வது இடத்திலும் (2.94 கோடி பேர்) உள்ளது.


