News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 15, 2025
தமிழக தேர்தல்.. களமிறங்கும் 3 மத்திய அமைச்சர்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பொறுப்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, ஆட்சி அமைக்கும் திட்டத்தோடு 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.
News December 15, 2025
துரோகம் செய்யவில்லை: ஜி.கே.மணி

ஜி.கே.மணி துரோகம் செய்ததாக <<18512558>>அன்புமணி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். துரோகி எனக் கூறியது வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க தானே பரிந்துரைந்ததாக கூறியுள்ளார். ராமதாஸ் வேதனையில் உள்ளதாகவும், இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 15, 2025
நடிகர் ரெய்னர் மனைவியுடன் சடலமாக மீட்பு!

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராப் ரெய்னர் (78), அவரது மனைவி மிச்செல் சிங்கர் ரெய்னர் (68) கொலை செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அவர்களது வீட்டில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளனர். கொலைக்கு அவர்களது மகனே காரணம் என சர்வதேச ஊடகங்கள் வெளியிடுகின்றன. நடிகராக 2 Emmy விருதுகளை வென்றுள்ள ராப், ‘When harry mets Sally’, ‘Misery’ போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.


