News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News January 1, 2026
இது பெரிய அவமானம்..

சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து Ex வீரர் திலீப் வெங்சர்க்கார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட போதுமான நல்ல வீரர் சர்ஃபராஸ் கானை புறக்கணிப்பது மிகவும் அவமானம் என சாடியுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான், <<18721642>>157 ரன்களை<<>> விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 1, 2026
ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளும் ‘ஜனநாயகன்’

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், வெளிநாடுகளில் தொடங்கியுள்ள ப்ரீ புக்கிங்கிலேயே படம் தற்போது வரை சுமார் ₹15+ கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க அது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
News January 1, 2026
கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பு அதிகம்: பிரேமலதா

2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கட்சியும் தங்களிடம் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தமிழகம் காணாத ஒரு தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் எனவும், இந்த முறை கூட்டணி அமைச்சரவை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.


