News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 13, 2025
ICC போட்டிகள் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பாகும்

இந்தியாவில், ICC போட்டிகளை ஒளிபரப்புவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து JioStar வெளியேறவில்லை என ICC தெரிவித்துள்ளது. $3 பில்லியன் நிதியிழப்பால், 2027 வரை போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து Jiostar வெளியேறுவதாக தகவல் கசிந்தது. இது உண்மையல்ல என்றும், இந்தியாவில் ஐசிசி போட்டிகளை ஒளிபரப்புவதில் Jiostar உறுதியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், Jiostar வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 12, 2025
விமான சேவைகள் சீரானது: இண்டிகோ

FDTL விதிகளை பின்பற்ற முடியாமல் INDIGO, கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இந்நிலையில் 138 நகரங்களை இணைக்கும் வகையில், இன்று 2,050 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக INDIGO கூறியுள்ளது. தங்களது சேவை டிச.9 சீரடைந்துள்ளதாகவும், உரிய நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, DGCA உத்தரவினால் 10% சேவைகளை INDIGO குறைத்தது குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்

கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், 2005-ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (NREGA) கொண்டு வரப்பட்டது. 2009-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஸ்கர் யோஜனா’ (PBGRY) என்ற பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக ₹1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


