News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 10, 2025
தமிழகத்தில் களமிறங்கும் ராகுல், பிரியங்கா!

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி TN-ல் பிரசாரத்திற்காக களமிறங்க உள்ளனர். கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் பங்கேற்பார் என்றும், பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 10, 2025
திருமணச் செலவுகள் எந்த நாடுகளில் எவ்வளவு ஆகிறது?

திருமணச் செலவுகள் பெரும்பாலும், விருந்தினர்களின் எண்ணிக்கை, திருமணம் நடைபெறும் இடம் மற்றும் இருவீட்டாரின் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே இருக்கும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் சராசரியாக திருமணச் செலவுகள் எவ்வளவு ஆகின்றன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 10, 2025
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட தவெக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.


