News August 13, 2024

18% இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்தால் என்ன நடக்கும்?

image

தமிழ்நாட்டில் <<13840277>>SC <<>>பிரிவில் 60க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இதில், பெரும்பான்மையாக பறையர், தே.கு. வேளாளர், அருந்ததியர் மக்கள் உள்ளனர். அதே நேரம், குறைந்த எண்ணிக்கையில் பல சமூகங்களும் உள்ளன. அப்படி இருக்கையில் 18% இடஒதுக்கீட்டை 3ஆக பிரிக்க வேண்டும் என்ற கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என கூறப்படுகிறது.

Similar News

News March 11, 2026

இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

image

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.

News March 11, 2026

BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

image

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

ஒரே இடம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் மோடி!

image

நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், <<19339925>>பாஜகவை CM ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்<<>> செய்திருந்தார். அதற்கு அதே திருச்சியில் இன்று மாலை PM மோடி பதிலடி கொடுக்க உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற உள்ளனர்.

error: Content is protected !!