News July 7, 2025
வரலாற்றில் இன்று நடந்தது என்ன?

1456ம் ஆண்டு – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.1575ம் ஆண்டு – இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.1799ம் ஆண்டு – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.1865ம் ஆண்டு – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
Similar News
News September 8, 2025
RECIPE: இந்த டிபன் சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்!

◆ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், சோள இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் உகந்தது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
➥வெள்ளைச் சோளம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥இவற்றை இட்லி பதத்திற்கு கிரைண்டரில் போட்டு, அரைத்து கொள்ளவும்.
➥பிறகு, 8 மணி நேரம் ஊற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லியாக வார்த்தெடுத்தால், ருசியான சோள இட்லி ரெடி. SHARE IT.
News September 8, 2025
EPS காய் நகர்த்தலுக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என EPS பேசியிருந்தார். இதற்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களை EPS சரி செய்துவிட்டு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என விமர்சித்துள்ளார். இப்படியே சென்றால் EPS-ன் அரசியல் வாழ்க்கை ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்ற நிலைக்கு செல்லும் எனவும் சாடியுள்ளார்.
News September 8, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வி; CM நச் பதில்

தனிப்பட்ட முதலீடுகளை செய்யவே CM ஜெர்மனி சென்றிருக்கிறார் என EPS சொன்னது சரிதான் என கூறிய CM ஸ்டாலின், பெரியார் கொள்கைகளை முதலீடு செய்து வந்துள்ளதை தான் அவர் அப்படி சொல்லியிருப்பார் என விளக்கமளித்துள்ளார். இதன் பின்பு, செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி பேசும் போது, அக்கப்போரான இந்த கேள்வி எதற்கு என பதிலளித்தார்.