News March 26, 2025

என்கவுன்ட்டர் சம்பவத்தில் நடந்து என்ன?

image

சென்னை என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் புகாரியை நோக்கி கொள்ளையன் ஜாபர் 2 முறை துப்பாக்கியால் சுட்டபோது, குண்டுகள் ஜீப்பில் பாய்ந்தன. இதனால், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுட்டபோது, நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

image

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

News July 11, 2025

லோகேஷ் மீது கோபம்: சஞ்சய் தத்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ‘கேடி: தி டெவில்’ பட விழாவில் ஜாலியாக பேசிய அவர் லியோ படத்தில் தனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை எனவும் தன் திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

News July 11, 2025

மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

image

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

error: Content is protected !!