News September 28, 2025
கரூரில் நடந்தது என்ன? கலெக்டர் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய 110 பேர் அரசு, தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெரும் அசம்பாவிதம் நடந்த உடனேயே மீட்பு பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டதாக கூறிய அவர், அரசின் உடனடி நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 28, 2025
அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியவில்லை: அண்ணாமலை

திமுக அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியாமல் விஜய் மீது பழியை போட விரும்புவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யை காண சிறிய இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே நெரிசலுக்கு காரணம் என காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது என்றார். அப்படி எனில், சென்னை மெரினாவில் கடந்தாண்டு நடந்த ஏர் ஷோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, 5 பேர் பலியானது ஏன்? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 28, 2025
மோடியால்தான் iPhone காவி நிறத்துக்கு மாறியது: சுதான்ஷூ

அண்மையில் வெளிவந்த iPhone 17 சீரியஸில் புதிதாக Cosmic Orange கலரும் இணைக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் காவி கலர் எனக் கூறிவர, இதுகுறித்த பாஜக MP’யின் கருத்து வைரலாகி வருகிறது. உ.பி.யின் காசியாபாத்தில் பேசிய சுதான்ஷூ திரிவேதி, உலக அரங்கில் PM மோடிக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில்தான், iPhone காவி நிறத்தில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 28, 2025
மனைவி, குழந்தைகளை மிஸ் செய்கிறேன்: அஜித்குமார்

ஷாலினி மட்டும் இல்லையென்றால், தன்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என அஜித்குமார் தெரிவித்துள்ளார். குழந்தைகள், குடும்பத்தை கவனித்து கொள்வது எளிதான காரியம் அல்ல. ரேஸிங், ஷூட்டிங் என எப்போதும் வெளியில் இருப்பதால், குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், வாழ்க்கையில் எதையாவது அடைய விரும்பினால், சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.