News April 25, 2025
அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

பஹல்காம் தாக்குதல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 25, 2025
தங்கம் விலை 2 நாள்களாக சரிவு.. காரணம் என்ன?

தங்கம் விலை 22-ம் தேதி 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த 2 நாள்களில் ரூ.2,280 சரிவைக் கண்டது. USA டாலர் மீதான மதிப்பு அதிகரிக்கையில், அதன் மீது முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு சரிகையில் தங்கம் மீது முதலீடு அதிகரித்து விலை அதிகரிக்கும். தற்பாேது டாலர் மதிப்பு உயர்வது உள்ளிட்டவையே தங்கம் விலை சரிவுக்கு காரணமாகும்.
News April 25, 2025
அதிகாலை தியானமும்.. அபார பலன்களும்

அதிகாலை அமைதியானது என்பதால், அப்போது தியானம் செய்வது, பல நல்ல பலன்களை வழங்கும் ◆மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ◆எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு மனது திறம்பட செயல்பட உதவும் ◆கவனச்சிதறல் தவிர்க்கப்படும் ◆தினமும் அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கத்தையும் மேம்படுத்த உதவுகிறது ◆செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற உணர்வுமிகுந்த ஹார்மோன்கள் வெளியேற உதவுகிறது.
News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகை.. நல்ல செய்தி வந்தாச்சு!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என Dy CM உதயநிதி கூறி இருந்தார். இந்நிலையில், முறையான அறிவிப்பு கருணாநிதி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனர்களின் வங்கிக் கணக்கில் ஜுலை முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.