News July 31, 2024
சாலையில் உள்ள இந்த போர்டுக்கு என்ன அர்த்தம்?

சாலையோரம் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் நோக்கில் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான், சிவப்பு கோடு கொண்ட முக்கோணத்திற்குள் வெள்ளை நிற பின்னணியில் 4 கரும்பு புள்ளிகளை கொண்ட போர்டு. இதற்கு என்ன அர்த்தம் என பார்க்கலாம். அப்பகுதி கண் பார்வையற்றோர் நடமாட்டம் இருக்கும் இடம். ஆதலால், அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாது. எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.
Similar News
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <
News December 5, 2025
பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.
News December 5, 2025
ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.


