News June 22, 2024
பங்குச் சந்தை உயிரினங்கள் எதை குறிக்கின்றன? (2/5)

தவளை ~ மழை பொழிவால் நீர் நிறைந்து காணப்படும் குளத்தில் இருக்கும் தவளை, கோடையிலும் அதே அளவு நீர் நிலைக்கும் என சூழல் புரியாமல், சூட்டைத் தாங்கிக்கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி நம்பிக்கையோடு காத்திருக்கும். அதுபோல, பங்குச் சந்தையில் மதிப்பு அதிகமாகிவிட்டதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பங்குச் சந்தையில் விளையாடும் முதலீட்டாளர்களை தவளை வகையைச் சேர்ந்தவர்கள் எனலாம்.
Similar News
News September 16, 2025
இதற்குதான் பாஜகவுடன் கூட்டணி..!

ஜெயலலிதா இறந்த பிறகு சிலர் அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்றதாகவும், அதனை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுதான் (பாஜக) என்றும் EPS தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் EPS குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
பதட்டம் நிறைந்த IND vs PAK போட்டிகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதும் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றாலும், இதனை புறக்கணித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த இந்தியா – பாக்., போட்டிகள் குறித்து மேலே Swipe செய்து பாருங்கள். உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
News September 16, 2025
குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு: வைகோ

CM ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டதாக வைகோ கூறியுள்ளார். திருச்சி மதிமுக மாநாட்டில் பேசிய அவர், திமுக சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு தான் காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதை இம்மாநாட்டில் பிரகடனம் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?