News February 23, 2025

மக்களுக்காக CM ஸ்டாலின் என்ன செய்தார்? ஜெயக்குமார்

image

திமுகவும் – பாஜகவும் ஒரு புரிதலுடன் செயல்படுவதால் மக்கள் பிரச்னையைப் பற்றி இருகட்சிகளும் பேசுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சமூக வலைதளங்களில் திமுகவும், பாஜகவும் பரஸ்பரம் டிரெண்டிங் செய்வது தொடர்பான கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார். மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர மக்களின் நன்மைக்காக CM ஸ்டாலின் என்ன செய்தார்? எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 23, 2025

CT கிரிக்கெட்: ரோஹித் புதிய சாதனை

image

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சுப்மன் கில்லுடன் ரோஹித் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 20 ரன்கள் எடுத்திருந்தபோது சகீன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், ஒருநாள் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை வேகமாக ரோஹித் கடந்தார். இதன்மூலம் 181 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை வேகமாக கடந்த முதல் துவக்க ஆட்டக்காரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

News February 23, 2025

TN முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

image

TNல் 1000 முதல்வர் மருந்தகத்தை நாளை CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 மருந்தகங்கள் அமையவுள்ளன. PMன் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில், குறைவான விலையில் மருந்துகள் வழங்கப்படும் எனவும், மக்களின் பொருளாதார சுமையை குறைக்க இது உதவியாக இருக்கும் என்றும் TN அரசு தெரிவித்துள்ளது.

News February 23, 2025

ஜகபர் அலி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்

image

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேரில் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோரை CBCID போலீசார் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் அருணா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக புகார் கொடுத்த ஜகபர் அலி கடந்த ஜன.17ம் தேதி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

error: Content is protected !!