News April 26, 2025
தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?
Similar News
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் அஞ்சலி

காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் அஞ்சலி

காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
News April 26, 2025
16 ஆண்டுகளில் CSK-வின் மோசமான ரெக்கார்ட்!

நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல், CSK வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என நினைக்குறீங்க?