News April 3, 2025
அன்று CM மோடி சொன்னது

இன்றைய PM மோடி, 2012-ல் குஜராத் CM-மாக இருந்தபோது பேசியதை, இன்று CM ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், மத்திய- மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும், மத்திய-மாநில நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் அப்போது மோடி வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News December 2, 2025
IPL-க்கு விடை கொடுத்த CSK சாம்பியன்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக EX-CSK வீரர் மோயின் அலி IPL தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக SM-ல் பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட் உலகில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2021 மற்றும் 2023-ல் CSK அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மொயின் அலி முக்கியபங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே <<18424665>>பாப் டு பிளெஸ்சிஸும் <<>>இதுபோல அறிவித்திருந்தார்.
News December 2, 2025
பயிர் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹35,000 வழங்குக: வீரபாண்டியன்

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.22 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய கம்யூ. கட்சியின் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடாக தர வேண்டும் என TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடு, மாடு இறப்புக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
News December 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 537 ▶குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
▶பொருள்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.


