News March 18, 2025
அரசு என்ன செய்ய முடியும்? ரகுபதி

மதுவால் இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால், அதற்கு அரசு என்ன செய்ய முடியும் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், “அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு கிடையாது. TNஇல் கொண்டு வந்தால் புதுச்சேரிக்கு சென்று மது அருந்தும் சூழல் உருவாகும். டாஸ்மாக்கில் குடித்துவிட்டு யாராவது இறந்தார்கள் எனப் புகார் வந்ததா? சூழ்நிலையை பொறுத்து மதுக்கடைகள் குறைக்கப்படும்” என்றார்.
Similar News
News September 22, 2025
வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.
News September 22, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.
News September 22, 2025
விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.