News March 20, 2025
இந்தியா மகிழ்ச்சியான நாடாக மாற என்ன செய்யலாம்?

<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?
Similar News
News July 9, 2025
காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
டெஸ்ட் தரவரிசை: மேல ஏறி வரும் சுப்மன் கில்!

ENG பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 2-வது இடத்தில் ENG-ன் ஜோ ரூட், 3-வது இடத்தில் NZ-ன் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். அதே நேரத்தில், இந்திய கேப்டன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை(807 புள்ளிகள்) பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் உள்ளனர்.
News July 9, 2025
IAS என்றால் கோர்ட்டை விட மேலானவரா? நீதிபதி கேள்வி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நிறுத்திவைக்க கோரி அவர் HC-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, IAS அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். கோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா என்று வினவிய அவர், ஆணையரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.